Showing posts with label லட்சுமண்ரேகா. Show all posts
Showing posts with label லட்சுமண்ரேகா. Show all posts

Wednesday, October 17, 2012

லட்சுமண்ரேகா


லட்சுமண்ரேகா
சீதை கேட்ட மாயமானை ராமன் பிடிக்கச் சென்ற போது, மானாக வந்த மாரீசன்""ஹா சீதா! ஹா லட்சுமணா! '' என்று ராமனைப் போலவே கூக்குரல் கொடுத்தான். இதைக் கேட்ட சீதை, மாரீசனால் அவருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று துடித்தாள். ராமனைக் காப்பாற்றச் செல்லும்படி லட்சுமணனை வேண்டினாள். லட்சுமணன் சீதையிடம், ""ராமனைக் காப்பாற்ற யாரும் தேவையில்லை. அரக்கர்கள் உலவும் காட்டில் உங்களுக்குத் தான் பாதுகாப்பு வேண்டும்'' என்று சமாதானம் செய்தான். ஆனால், சீதை ஒத்துக்கொள்வதாய் இல்லை. வலுக்கட்டாயமாக லட்சுமணனை அனுப்பிவைத்தாள். அப்போது லட்சுமணன் பாதுகாப்புகருதி, தன் அம்பினால் அவள் தங்கியிருந்த குடிலைச் சுற்றி கோடுபோட்டார். அந்த கோட்டிற்கு ""லட்சுமண்ரேகா'' என்றுபெயர். "ரேகா' என்றால் "கோடு'. தன் அண்ணியிடம் லட்சுமணன்,""தேவி! நான் பாதுகாப்புக்காக இடும் இந்தக்கோட்டை எக்காரணம் கொண்டும் தாண்டாதீர்கள்'' என்று சொல்லிவிட்டு புறப்பட்டான். 
பிச்சைக்காரன் வேடமிட்டு வந்த ராவணனால் லட்சுமணன் போட்டகோட்டைத் தாண்டமுடியவில்லை. கோட்டில் காலை வைத்த ராவணனை நெருப்பு சுட்டெரித்தது. ""அம்மா! பிச்சையிடுங்கள்!'' என்று குரல் எழுப்பினான் ராவணன். சீதையும் பிச்சையிடுவதற்காக லட்சுமணன் இட்டகோட்டைத் தாண்டினாள். ராவணன் தன் சுயரூபத்தைக் காட்டி சீதையை இலங்கைக்கு சிறையெடுத்தான். பெண்கள் வரையறை வகுத்துக்கொண்டு வாழ்வது கணவருக்கும், குடும்பத்துக்கும் நல்லது என்ற கருத்தில் இந்தச்சம்பவம் விவரிக்கப்படுகிறது.